Tuesday 16 October 2012

MEETING WITH CPMG


15.10.2012 அன்று  தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் அழைக்கப் பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ,  நிர்வாகத் தரப்பில் CPMG TN  சார்பாக முதலில் , ஏற்கனவே 05.10.2012  அன்று  ஊழியர் தரப்புடன் பேச்சு வார்த்தை நடைபெற்று விட்டதாகவும் , அதன் அடிப்படையில் MINUTES  அளிக்கப்பட்டு  அதன் மீது  நடவடிக்கை  தொடங்கி   விசாரணை நடந்து வருவதாகவும்   ஆகவே  இதனையும் மீறி  ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில்  ஈடுபடக்கூடாது  என்றும்  ஒரு கடிதம் அளிக்கப்பட்டது . மேலும் பேச்சு வார்த்தை  நடத்துவதாக ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்தாலும்  இந்த சூழ்நிலையில் இனி பேச்சு வார்த்தை  நடத்திடவேண்டாம் என்றும்  நிர்வாகம் முடிவாக இருந்தது.

நாம் ஏற்கனவே  அளித்த MINUTES  மீதான கடிதத்தை சுட்டிக் காட்டி , எவ்வளவு தூரம் தவறான தகவல்கள் நிர்வாகத்தால் அளிக்கப் படுகின்றன என்பதை  விளக்கினோம் . மேலும்  விசாரணை எங்கு நடைபெறுகிறது  என்பது குறித்து எவருக்காவது  தகவல் தெரியுமா ? அப்படி  ரகசிய விசராணை நடைபெற்றால் அது சரியா ?  இந்த விபரம் அறிவிக்கையாக  வெளியிடப்படாமல் விசாரணை அதிகாரி  தனக்கு சாதகமான சாட்சியங்களை மட்டும் கூட்டி விசாரிக்கிறாரா ? எவர் எவரிடம் விசராணை செய்தார்  என்றெல்லாம்  நாம் எழுப்பிய கேள்விகளுக்கு நிர்வாகத் தரப்பில்  சரியாக பதில் அளிக்க முடியவில்லை . இதனால் கோபம் அடைந்த  தொழிலாளர் நல ஆணையர் " உங்கள் செய்கை வேலை நிறுத்தத்தை நிறுத்துவதற்கு பதில்  தூண்டுவதாக உள்ளது . இப்படியெல்லாம் செய்தால் CABINET SECRETARY  அளவில் REPORT  அனுப்ப வேண்டியிருக்கும்" என்று  நிர்வாகத் தரப்பை எச்சரித்தார்.  விசாரணை என்பது வெளிப்படையாக அறிவிக்கப் பட்டு   அனைவருக்கும்  புகார் அளிக்க வாய்ப்பு அளிக்கப் படவேண்டும் என்றும் , அதனை  புகாருக்குள்ளான அதிகாரியின் CADRE க்கு  மேலான பதவியில் உள்ளவர் தான் மேற்கொள்ள வேண்டும் என்றும் , விசாரணையின் எல்லை வரம்பை  விரிவு படுத்தி TERMS OF REFERENCE  அளிக்கப் படவேண்டும் என்றும்  நிர்வாகத்தை அறிவுறுத்தினார்.

உடன் CPMG  அவர்களை  தொடர்பு கொண்டு   பேச்சு வார்த்தையை அறிவிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டார் . எனவே வேறு வழியில்லாமல் பேச்சு வார்த்தைக்கு  நேரம் கேட்டுப் பெறப்பட்டு அறிவிக்கப் பட்டது . இதன் படி 16.10.2012 அன்று காலை 10.30 மணியளவில் மீண்டும் பேச்சு வார்த்தை  நடைபெற வுள்ளது .